மன்னார் நகர் பகுதியில் கால் இல்லாதவர் போல் நடித்து யாசகம் பெற்றுவந்த ஒருவரை இன்று இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மன்னார் நகர் பகுதிகள் அண்மைகாலமாக சிறு பிள்ளைகளுடனும் அங்கவீனம் உடையவர்களை போலவும் நடித்து யாசகம் கேட்கும் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் பகுதியை சாரந்தவர்களே மேற்பாடி ஏமாற்றி யாசகம் பெற்றுவருவதுடன் யாசகம் வழங்காதவர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்த நிலையிலே இன்றைய தினம் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு போலியாக ஏமாற்றிய நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.